
தென்மேற்கு மெக்ஸிகோவில் குபேரா மாகாணத்தில் 2,80,000 பேர் வசிக்கின்றனர். இங்குள்ள ஷில்பாண்சிங்கோ நகரில் நடைபெற்ற மேயர் தேர்தலில் அலெஜான்ட்ரோ ஆர்காஸ் என்பவர் வெற்றி பெற்று மேயராக பதவி ஏற்றார். இந்த நிலையில் அலெஜான்ட்ரோ ஆர்காசை மர்ம நபர்கள் தலையை துண்டித்து கொலை செய்துள்ளனர்.
இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. அந்த மாவட்டத்தில் சமீப காலமாக வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுகிறது. அதிலும் அரசு அதிகாரிகள், அரசியல்வாதிகள், ஊடகவியலாளர்கள் மீது குறி வைத்து தாக்குதல் நடத்துகின்றனர். கடந்த ஜூன் மாதம் நடந்த போது தேர்தலின் போது சுமார் 6 வேட்பாளர்கள் கொலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.