மத்திய பிரதேசம் மாநிலம் போபா மாவட்டத்தில் நீதிமன்றம் உள்ளது. இங்கு இந்து பெண்ணை திருமணம் செய்து கொண்ட முஸ்லிம் இளைஞர் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அந்த முஸ்லிம் இளைஞர் பிபாரியாவில் வசித்து வருகிறார்.

இவர் இந்து பெண்ணை திருமணம் செய்து கொள்வதற்காக போபாவில் உள்ள கோர்ட்டுக்கு வந்துள்ளார். அப்போது லவ் ஜிகாத் என்று கூறி முஸ்லிம் இளைஞரை வலதுசாரி அமைப்பைச் சேர்ந்தவர்கள் சரமாரியாக தாக்கினார். இது குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.