
கர்நாடக மாநிலத்தில் மனு குமார் (25) என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு ஹோட்டல் வைத்து நடத்தி வரும் நிலையில் பவானி (25) என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். இவர்கள் இருவரும் கல்லூரியில் படிக்கும் போது இருந்தே காதலித்து வந்தனர். கடந்த சில மாதங்களாக மனு பவானியுடன் சரிவர பேசவில்லை என்று கூறப்படுகிறது. அதோடு திருமணத்தைப் பற்றி பேசினாலும் இப்போது வேண்டாம் என்று கூறி மறுத்துள்ளார். அதோடு செல்போனில் கூட பவானி உடன் அவர் பேச மறுத்துள்ளார்.
இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு புத்தாண்டை கொண்டாட நள்ளிரவு 12 மணி அளவில் மனுவை நண்பர்கள் அழைத்த நிலையில் அங்கு பவானியும் சென்றுள்ளார். இதைத்தொடர்ந்து பவானி மற்றும் மனு இருவரும் ஒரு அறையில் அமர்ந்து தங்களுடைய காதல் மற்றும் திருமணம் பற்றி பேசிய நிலையில் மனு திருமணத்திற்கு மறுத்துள்ளார். இதனால் கோபத்தில் பவானி தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் அவரைக் குத்திவிட்டார். இதில் மனுவுக்கு பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் நண்பர்கள் மீட்ட மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து பவானியை கைது செய்துள்ளனர்.