18 ஆவது ஐபிஎல் தொடரில் 10 அணிகள் பங்கேற்று இருந்தது. இதன் இறுதி போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்றது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ், பெங்களூர் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதினர். இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் எடுத்து 190 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து 191 ரன்கள் எடுத்தால் சாம்பியன் பட்டத்தை வெல்லலாம் என்ற நிலையில் களம் இறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 184 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் பெங்களூர் அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை பெற்றது. பஞ்சாப் தரப்பில் அதிகபட்சமாக ஷஷாங் சிங் 61 ரன்கள் எடுத்தார். ஆர் சி பி சார்பில் அதிகபட்சமாக புவனேஸ்வர், குருனால் பாண்டியா தல இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இந்த போட்டியின் ஆட்டநாயகன் விருதை குருனால் பாண்ட்யாவுக்கு வழங்கப்பட்டது. இதன் மூலம் அவர் ஐபிஎல் வரலாற்றில் முதல் வீரராக சாதனை படைத்துள்ளார். அதாவது ஐபிஎல் வரலாற்றில் இறுதிப் போட்டியில் 2 முறை ஆட்டநாயகன் விருது வென்ற முதல் நாயகன் என்ற சாதனையை குருனால் பாண்ட்யா படைத்துள்ளார்.