
கனடா நாட்டு பிரதமராக இருப்பவர் ஜஸ்டின் ட்ரூடோ. இவர் லிபரல் கட்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆனால் இது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளிவரவில்லை. ஆனால் இந்த ராஜினாமா புதன்கிழமை நடைபெற இருக்கும் செயற்குழு கூட்டத்திற்கு முன்பாக நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது பற்றிய கேள்விக்கு கனடா பிரதமர் அலுவலகம் பதிலளிக்கவில்லை. இவர் உடனே பதவி விலகுவாரா? அல்லது புதிய தலைவர் வரும் வரை நீடிப்பாரா? என்பது தெரியவில்லை.
இவர் கடந்த 2013ம் ஆண்டு லிபரல் கட்சியின் தலைவராக பொறுப்பேற்றார். அந்த கட்சி ஆழ்ந்த சிக்கலில் இருந்தது. அப்போது முதல் முறையாக ஹவுஸ் ஆப் காமன்ஸில் 3வது இடத்திற்கு தள்ளப்பட்டது. இவரது விலகல் காரணமாக அக்கட்சி மோசமான தோல்வியை சந்திக்கும் என்று கருத்து கணிப்பு வெளியாகி உள்ளது. இந்நிலையில் லிபரல் கட்சிக்கு நிரந்தர தலைவர் இல்லாமல் போக வாய்ப்பும் உள்ளது.