உலகம் முழுவதும் crowd strike-ன் இணையதள கோளாறால் மைக்ரோசாப்ட் சேவை முடங்கியுள்ளது.‌ இதன் காரணமாக விமான சேவை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. அதன்படி பெங்களூருவில் 90 சதவீதம் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்ட நிலையில் சென்னையிலும் ஏராளமான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.

அதன் பிறகு உலகம் முழுவதும் 1000-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்தியாவில் மட்டும் 150-க்கும் மேற்பட்ட விமான சேவைகள் ரத்து செய்யப்பட்ட நிலையில் உலகம் முழுவதிலும் சுமார் 1390 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.