கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் மத்திய தொழில் பாதுகாப்புப் படை வீரர் ரவி கிரண் துப்பாக்கி குண்டு பாய்ந்து உயிரிழந்துள்ளார். இரவு பணி முடிந்து வீடு திரும்பியபோது அவர் கொண்டு வந்த துப்பாக்கி கழுத்தில் பட்டு குண்டு பாய்ந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனையடுத்து  ரவி கிரண் உடல் பேருந்தில் கொண்டு வரப்பட்டு கல்பாக்கம் அணுசக்தி மருத்துவமனை வளாகத்தில் வைத்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.