இயக்குனர் ராஜேஷ் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்திருக்கும் பிரதர் படம் தீபாவளி அன்று வெளியாக உள்ளது. இந்நிலையில் படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஜெயம் ரவி மற்றும் இயக்குனர் ரசிகர்களுக்கு மத்தியில் பேசினர். அதில் ஜெயம் ரவி பேசும் போது நெறியாளர் அவரிடம் நீங்கள் வீட்டில் சந்தோஷ் சுப்பிரமணியம் சந்தோசா இல்லை… உனக்கும் எனக்கும் பட சந்தோஷ… என கேட்டார்.

அதற்கு ஜெயம் ரவி நான் வீட்டில் சந்தோஷ் சுப்பிரமணியம் சந்தோஷ், தான் காலேஜ் காம்பவுண்ட் உள்ளே சென்று விட்டால் உனக்கும் எனக்கும் சந்தோஷ் என்று பதிலளிதுள்ளார்.

மேலும் நமக்கு எப்படி பிடித்துள்ளதோ.!! அப்படி இருக்க வேண்டும், அதுதான் வாழ்க்கை வேறு எதை பற்றியும் கவலைப்படத் தேவையில்லை, ஒன் லைஃப் லைவ் ஹாப்பி என்றார். இதனை தொடர்ந்து தான் ஏற்று நடித்த கதாபாத்திரங்களில் தனக்கு நெருக்கமானது ‘பேராண்மை’ படத்தில் நடித்த கதாபாத்திரம் என்றும் அவர் கூறினார்.