
மனிதர்கள் ஒருவருக்கொருவர் காட்டும் அன்பும், பரிவும், கவலையும் குடும்ப வாழ்க்கையின் முக்கியமான அம்சங்களாகத் திகழ்கின்றன. குடும்ப உறுப்பினர்களில் ஒருவர் ஏதேனும் காரணத்தால் மனமுடைந்தால், மற்றவர்கள் அவற்றை உணர்ந்து உடனடியாக கவலைப்பட்டு அவரை நலமாக்க முயற்சி செய்வது வழக்கம்தான். ஆனால் இப்படிப்பட்ட உணர்வுகளை விலங்குகளும் பறவைகளும் மனிதர்களிடம் காட்டுமா என்ற கேள்விக்கு, சமீபத்தில் வெளியாகிய ஒரு வீடியோ ஓர் உணர்ச்சி பூர்வமான பதிலாக இருக்கிறது.
சமூக ஊடகங்களில் தற்போது வைரலாகி வரும் இந்த வீடியோவில், ஒரு பெண் தன்னுடைய செல்லப்பறவையாக இருக்கும் வாத்துகளின் அணுகுமுறையைப் பார்ப்பதற்காக, நடந்து செல்லும் போது திடீரென மயங்கி விழுவது போல நடிக்கிறார். அப்பொழுது அந்த வாத்துகள் எதிர்பாராத விதமாக எச்சரிக்கையுடன் அதிரடியாக அவ்விடத்திற்கு ஓடி வருகிறன. பெண்மீது அக்கறை காட்டும் விதத்தில் அவரை சுற்றி நின்று, கவலையுடன் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்துகின்றன.
She collapses…..and her geese go on red alert!
Animals have more heart than many humans. pic.twitter.com/CopBcm2A76
— Nature is Amazing ☘️ (@AMAZlNGNATURE) May 29, 2025
இந்த வீடியோ @AMAZlNGNATURE என்ற இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவேற்றப்பட்டுள்ளது. இதில், “அவர் விழுகிறார்… வாத்துகள் உடனே எச்சரிக்கையுடன் வருகிறன. விலங்குகள் சில நேரங்களில் மனிதர்களை விட அதிகமான மனம் கொண்டவர்கள்” என்ற வாசகம் இடப்பட்டுள்ளது. இந்த வீடியோ தற்போதைய கணக்கெடுப்பின்படி 9.3 லட்சத்துக்கும் மேற்பட்ட பார்வைகளை பெற்றுள்ளது.
வீடியோவில் ஆரம்பத்தில், சில வாத்துகள் வெளிபுறத்தில் உள்ள பச்சை நிலத்தில் தண்ணீர் பழங்கள் அருகே அமைதியாக நிற்கிறது. சில வாத்துகள் சுற்றிலும் சுற்றித் திரிகின்றன. அந்த வாத்துகளை வளர்த்து பராமரிக்கும் பெண், நடந்து செல்லும் போது திடீரென மயங்கி விழுவது போல நடிக்கிறார். அதற்குப் பிறகு வாத்துகள் அந்த பெண்ணை நோக்கி பதட்டத்துடன் ஓடிச் சென்று அவரை பாதுகாக்கும் வகையில் சுற்றி நிற்கின்றன.
இந்த வீடியோ பலருடைய உள்ளங்களை நெகிழ வைத்துள்ளது. விலங்குகளும் பறவைகளும் உணர்வுகளை கொண்டுள்ளன என்பது பலமுறை நிரூபிக்கப்பட்டாலும், ஒவ்வொரு முறையும் அதைக் காணும் போது புதிய மகிழ்ச்சியைத் தருகிறது. வாத்துகள் காட்டிய அன்பும், அக்கறையும், மனித உறவுகளைப் போலவே உயிரினங்களுக்கும் உணர்ச்சி இருக்கிறது என்பதை நமக்கு நினைவூட்டுகிறது.