ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரை சேர்ந்த சிறுமி ஒருவர் தனது இன்ஸ்டா நண்பனை பார்க்க பாகிஸ்தான் செல்ல முயற்சித்துள்ளார். ஜெய்ப்பூர் விமான நிலையத்திற்கு சென்ற அந்த சிறுமி பாகிஸ்தான் செல்ல இருப்பதாக கூறிய போது காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். இது குறித்து விமான நிலைய அதிகாரி கூறுகையில், சிறுமியிடம் பாகிஸ்தான் செல்வதற்கு தேவையான எந்த ஆவணங்களும் இல்லை என்றும் ஜெய்ப்பூரில் இருந்து பாகிஸ்தானுக்கு விமானம் கிடையாது என்றும் கூறியுள்ளார்.

சிறுமியிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்ட போது தான் பாகிஸ்தானுக்கு தனது இன்ஸ்டாகிராம் நண்பனை பார்க்க செல்வதாக கூறியுள்ளார். சிறுமியின் குடும்ப உறுப்பினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் வந்த பிறகு சிறுமியை ஒப்படைக்க இருப்பதாகவும் காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.