
அலுவலர் பணிக்கான அறிவிப்பை இந்தியன் வங்கி வெளியிட்டுள்ளது. காலியாக உள்ள சுமார் 300 பணியிடங்களில் தமிழக மற்றும் புதுச்சேரியில் மட்டும் 160 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் தேர்வாகும் நபர்களுக்கு கட்டாயம் தமிழ் தெரிந்திருக்க வேண்டும். அதேசமயம் தமிழகத்திற்குள் மட்டுமே பணியமர்த்தப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு விண்ணப்பிக்க செப்டம்பர் 2 கடைசி நாள் ஆகும். ஏதேனும் ஒன்றில் டிகிரி முடித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். இது குறித்த மேலும் கூடுதல் விவரங்கள் அறிய மற்றும் விண்ணப்பிக்க அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தை அணுகவும்.