
ஆந்திராவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பிரபல கண் மருத்துவமனையின் தலைவர் ஒருவர் கூறுகையில், இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 30 ஆயிரம் குழந்தைகளுக்கு பார்வை குறைபாடு ஏற்படுகிறது. நாளுக்கு நாள் இதன் எண்ணிக்கை மேலும் அதிகரித்து வருகிறது. சிறுவயதில் குழந்தைகளுக்கு மங்கலான பார்வை ஏற்படுவதற்கான முக்கிய காரணம் ஊட்டச்சத்து குறைபாடு. செல்ஃபோன் மற்றும் தொலைக்காட்சியை நீண்ட நேரம் பார்ப்பது, கம்ப்யூட்டரில் கேம் விளையாடுவது போன்றவை தான் பார்வை குறைபாடுக்கு காரணமாக உள்ளன.
மேலும் குழந்தைகளுக்கு பார்வை குறைபாடு தொடர்பான பிரச்சனைகளை தவிர்க்க பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு தரமான உணவை வழங்க வேண்டும். இந்தியாவில் நீரழிவு நோய் உயர் ரத்த அழுத்தம் மற்றும் பிற நோய்களால் சுமார் 1.8 கோடி பேர் கண் பார்வை குறைபாடுகளை எதிர்கொள்கின்றனர். கம்ப்யூட்டர் விஷன் சின்ரோம் என்று அழைக்கப்படும் ட்ரை ஐ சின்ரோம் பாதிப்புகள் ஏற்பட காரணம் மக்கள் தங்கள் பெரும்பாலான நேரத்தை செல்போனில் செலவிடுவதால் தான் அதிவேகமாக அதிகரித்து வருகிறது. மேலும் சுற்றுச்சூழல் மாசுபாடு, வெப்பநிலை அதிகரிப்பு, விபத்துக்கள் போன்ற காரணமாகவும் கண் பாதிப்பு அதிகரித்து வருகின்றன என கூறியுள்ளார்.