
சர்வதேச கிரிக்கெட் போட்டியில் சாதித்த வீரர் மற்றும் வீராங்கனைகளை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ‘ஹால் ஆஃப் பேம்’ என்ற பட்டியலில் இணைத்து கௌரவம் அளித்து வருகின்றது. அதன்படி அந்த பட்டியலில் 3 பேரை புதிதாக சேர்த்து ஐ.சி.சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில் இங்கிலாந்து அணியின் அலைஸ்டர் குக் மற்றும் இந்திய வீராங்கனை நீது டேவிட், தென் ஆப்பிரிக்காவின் அதிரடி பேட்ஸ்மேன் ஏபிடி வில்லியர்ஸ் ஆகியோரை பட்டியலில் இணைத்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கௌரவப்படுத்தியுள்ளது .
இதில் இந்திய வீரர்களான கவாஸ்கர், கபில்தேவ், கும்ப்ளே, சச்சின், வினோ மன்கட் சேவாக் மற்றும் ராகுல் டிராவிட் ஆகியோர் ஏற்கனவே இந்த கௌரவத்தை பெற்றுள்ளனர். மேலும் சர்வதேச போட்டியிலிருந்து ஓய்வு பெற்ற வீரர்கள் 5 ஆண்டுகளுக்கு பிறகு தான் இந்த கௌரவத்திற்கு பரிந்துரைக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.