இந்தியாவில் உள்ள ஹைதராபாத்தில் மே 10-ம் தேதி 72 வது மிஸ் வேர்ல்ட் உலகிப் போட்டி தொடங்கியது. இந்தப் போட்டியில் மொத்தம் 109 நாடுகளில் இருந்து அழகிகள் இந்தியாவுக்கு வந்திருந்தனர். அதன் இறுதிச் சுற்று ஹைதராபாத்தில் நேற்று நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை தெலுங்கானா மாநில அரசும், உலக அழகி போட்டி ஏற்பாடுகளும் மேற்கொண்டனர்.

இதில் தாய்லாந்து அழகி ஓபல் சுசதா சுவாங்ஸ்ரீ வெற்றி பெற்றார். அவருக்கு கடந்த ஆண்டு போட்டியில் கலந்து கொண்டு 71 வது மிஸ் வேர்ல்ட் பட்டம் பெற்ற செக் குடியரசை சேர்ந்த கிறிஸ்டினா பிஸ்கோவா கிரீடம் சூட்டினார்.

இந்நிலையில் வெற்றி பெற்ற தாய்லாந்து அழகி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது நான் மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் உணர்கிறேன். தாய்லாந்துக்கான முதல் உலக அழகி கிரீடம் பெற்று தந்திருப்பது கௌரவம் அளிக்கிறது. அவர்களை பெருமையடைய செய்திருக்கிறேன் என்று நம்புகிறேன். எனக்கு வாய்ப்பு கிடைத்தால் பாலிவுட் படங்களில் நடிக்க ஆசையாக உள்ளேன். அது ஆச்சரியம் அளிக்கும் வாய்ப்பாக இருக்கும் என்றார்.