
பாலிவுட் சினிமாவில் பிரபல நடிகையாக இருப்பவர் வாமிகா கபி. இவர் கடந்த 2012 ஆம் ஆண்டு பாலிவுட் சினிமாவில் அறிமுகமான நிலையில் ஸ்டூடண்ட் ஆப் தி இயர்,கள்ளிபாய், கங்குபாய் கதியாவதி, டியர் ஜிந்தகி போன்ற பல படங்களில் நடித்த இவர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.
சமீபத்தில் வாமிகா கபி ஒரு நேர்காணலில் கலந்து கொண்ட நிலையில் பிரபல இயக்குனர் கரண் ஜோஹர் குறித்து பேசினார். அதில் அவர் பேசியதாவது, நடிகை ஐஸ்வர்யா ராய், கீர்த்தி சனோன் மற்றும் ஆலியா பட் போன்ற நடிகைகளின் நட்சத்திர பயணத்தில் கரன் ஜோஹர் முழு ஆதரவு கொடுத்துள்ளார்.
“இது போன்ற நடிகைகளிடம் இருந்து நான் திருட விரும்பும் ஒரே விஷயம் கரன் ஜோஹர் மட்டும்தான், தனக்கும் அவரது ஆதரவு வேண்டும்” என்று வாமிகா கவி நேர்காணலில் கூறினார். அப்போது கீர்த்தி சுரேஷிடமிருந்து பணிவு, வருண் தவானின் ஆற்றல், அனன்யாபாண்டேவின் சருமம் மற்றும் கீர்த்தி சனோனின் உயரம் போன்ற பிற நடிகைகளின் அம்சங்கள் ஆகியவற்றை தான் திருட விரும்புவதாகவும் நகைச்சுவையுடன் உரையாடினார்.