
மலையாளத் திரை உலகில் முன்னணி நடிகராக இருப்பவர் திலீப். மோகன்லால், மம்முட்டி போன்ற முன்னணி நடிகர்களுக்கு அடுத்த படியாக இடம் பிடித்திருக்கும் இவர் கடந்த 2017ல் பிரபல நடிகை ஒருவரின் கடத்தல் வழக்கில் சிக்கி சிறைக்கு சென்றார்.
அதன் பின் ஜாமினில் வெளிவந்த இவர் பெரும்பாலும் படங்களில் நடித்துவிட்டு அமைதியாக இருந்து வருகிறார். அவர் சிறையில் இருந்த சமயத்தில் கூட ராம்லீலா திரைப்படம் வெளியானது. இப்படம் 100 கோடி வசூலை பெற்றது.
ஆனால் கடத்து சில ஆண்டுகளாக அவர் கதை தேர்வு செய்வதில் கோட்டை விடுவதால் தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வருகிறார். இந்நிலையில் அவரது நடிப்பில் வெளியான ‘பிரின்ஸ் அன்ட் பேமிலி’ என்ற படம் வெற்றி பெற்றுள்ளது.
இதனை தொடர்ந்து படத்தின் வெற்றி சந்திப்பை நடத்தினர். அப்போது பேசிய திலீப் கூறியதாவது, எப்படி எனக்கு இக்கட்டான சமயத்தில் ராம்லீலா திரைப்படம் கை கொடுத்ததோ அதேபோன்று தற்போது பிரின்ஸ் அண்ட் பேமிலி திரைப்படமும் கை கொடுத்துள்ளது.
8 ஆண்டுகளாக நான் என்னுடைய படங்களை பற்றி மட்டுமே பேசி வருகிறேன். வேறு எந்த விஷயத்தை பற்றி பேசுவதற்கு எனக்கு சுதந்திரம் இல்லை. ஆனால் ஒரு நாள் கடவுள் நிச்சயமாக நான் பேசுவதற்கு எனக்கு வாய்ப்பே கொடுப்பார். அந்த ஒரு நாள் வரும் வரை அமைதியாக காத்திருக்கிறேன் என்று தனது வேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.