
தமிழ் திரை உலகில் முன்னணி நடிகைகளில் ஒருவர் சமந்தா. இவர் சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற பிஹைண்ட்வுட்ஸ் விருது விழாவில் கலந்து கொண்டார். இவருக்கு புகழ் பெற்ற கே. பாலச்சந்தர் ஆல் ஆஃப் ஃபேம் விருது வழங்கப்பட்டது. விழா மேடையில் நடிகை சமந்தா ஏறிய போது சுற்றி இருந்த ரசிகர்கள் ஆரவாரத்தில் கத்தி கூச்சலிட்டனர். இதனை பார்த்த நடிகை சமந்தா மிகுந்த நன்றி உணர்வோடு உரையாற்றினார்.
இந்த விழாவில் அவர் கூறியதாவது, கடந்த 2 ஆண்டுகளாக நான் தமிழ் சினிமாவில் எந்த ஒரு படங்களிலும் நடிக்கவில்லை. எந்த ஒரு ஹிட்டும் கொடுக்கவில்லை. ஒரு நடிகை ஹிட் படம் கொடுத்தால்தான் ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடிக்க முடியும். ஆனால் எதுவுமே இல்லாமல் நீங்கள் அளிக்கும் அன்பு ஆதரவும் என்னை மெய் மறக்க செய்தது. நான் என்ன செய்தேன் என்பது கூட எனக்கு புரியவில்லை. ஆனால் நீங்கள் இல்லாமல் நான் இங்கு நிற்பதற்கு வாய்ப்பே இல்லை என ரசிகர்கள் குறித்து உருக்கமாக பேசினார்.

இதனை அடுத்து கே. பாலச்சந்தர் சார் பெயரில் விருது வாங்குவது எனக்கு மிகவும் பெருமையாக உள்ளது. அவரது படங்களில் நடிகைகளுக்கு வலிமையான கதாபாத்திரம் எப்பொழுதும் கொடுக்கப்படும். எனவே இந்த விருது என் சினிமா திரையுலகில் ஒரு மைல் கல்லாக அமையும் என நினைக்கிறேன் எனவும் கூறினார்.
மேலும் இவருக்கு “சிட்டாடல் ஹனி பனி” என்ற வெப் சீரிஸ்காகவும் சிறந்த நடிகை விருதும் வழங்கப்பட்டது. தொழில் ரீதியாக சமந்தா இதுவரை எந்த ஒரு புதிய தமிழ் படத்திலும் நடிப்பதாக தகவல்கள் வெளிவரவில்லை. கடைசியாக கடந்த கால 2022 காத்து வாக்குல ரெண்டு காதல் தமிழ் படத்தில் நடித்திருந்தார். தற்போது தயாரிப்பு நிறுவனம் ஒன்றை தொடங்கி உள்ளார்.