
டெல்லியில் உலக பாதுகாப்பு மாநாடு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த மாநாடு கடந்த 2-ம் தேதியில் இருந்து 4-ம் தேதி வரை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சாலைப்போக்குவரத்து துறை அமைச்சர் நிதின்கட்கரி கலந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது, சாலை விதிகளை மீறியவர்களுக்கு எவ்வளவு தான் அபராதம் விதிப்பது?.
அபராத தொகையை அதிகரித்துக் கொண்டே இருக்க முடியாது. அதற்கு மாறாக சாலைகளை பயன்படுத்துவோரின் மனநிலையில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும். சாலை விதிகளை உறுதியாக அமல்படுத்த புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி வருகிறோம்.
அதோடு அபராதத்தையும் அதிகரித்துவிட்டோம். இருப்பினும் எந்த பயனும் இல்லை. கடந்த 2019-ம் ஆண்டு மோட்டார் வாகனத்தின் சட்டங்களை அரசு திருத்தம் செய்தது. அப்பொழுது அபராதமும் உயர்த்தப்பட்டது. அதன் பிறகும் சாலை விதிகளை மீறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது.
இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் தலைக்கவசம் அணியாமல் பயணிப்பதால் உயிரிழப்புக்கள் அதிகரிக்கின்றனர். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு, தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனம் ஒட்டியவர்கள் விபத்தில் சிக்கி 50,029 பேர் உயிரிழந்துள்ளனர் என்று அவர் கூறினார்.