புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு  வருகிற மார்ச் 13-ஆம் தேதி விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக வருகிற ஏப்ரல் 1-ம் தேதி சனிக்கிழமை பணி நாளாக செயல்படும் என கூறப்பட்டுள்ளது. மேலும் வழக்கமாக சனிக்கிழமை தோறும் இயங்கும் அலுவலகங்களுக்கு ஏப்ரல் இரண்டாம் தேதி ஞாயிற்றுக்கிழமை பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.