
ஆயுத பூஜையை முன்னிட்டு சென்னையில் இருந்து பல்வேறு நகரங்களுக்கு செல்லும் விமான கட்டணங்களில் கடும் உயர்வு ஏற்பட்டுள்ளது. மதுரைக்கு செல்வதற்கு வழக்கமாக ரூ.4,200 மட்டுமே இருந்த விமானக் கட்டணம், தற்போது ரூ.12,026 முதல் ரூ.18,626 வரை உயர்ந்துள்ளது. தூத்துக்குடி வழித்தடத்திலும் கட்டணம் ரூ.11,736 முதல் ரூ.13,626 வரை உயர்வடைந்துள்ளது. இதேபோல், திருச்சிக்கான கட்டணம் அதிகபட்சமாக ரூ.6,907 மற்றும் கோவைக்கு அதிகபட்சமாக ரூ.10,996 வரை உயர்ந்துள்ளது.
இந்த கட்டண உயர்வு, பண்டிகைக் காலத்தில் அதிகரித்த பயணத்தேவையை முன்னிட்டு ஏற்பட்டுள்ளது. பண்டிகை நாட்களில் திடீரென உயர்ந்த பயணிகள் எண்ணிக்கையை சமாளிக்க, விமான நிறுவனங்கள் தங்களது கட்டணத்தை அதிகரித்துள்ளன.