மும்பையில் சர்வதேச ஒளி, ஒலி உச்சி மாநாடு நடைபெற்றது. இதில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர் கூறியதாவது, தனது வாழ்வில் பல்வேறு சவால்களை திறம்பட தொலைநோக்கோடு எதிர்கொண்டு வெற்றி பெற்ற போராளி பிரதமர் மோடி.

உள்நாட்டு பிரச்சினைகள் மட்டுமல்லாமல் சர்வதேச பிரச்சனைகளையும் திறம்பட சமாளித்தவர். எந்த பிரச்சனையையும் மன உறுதியுடன் எதிர்கொண்டு போராடி வெல்லும் இவர் பஹல்கான் தீவிரவாத தாக்குதலுக்கு சரியான பதிலடி கொடுப்பார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது என்று தெரிவித்தார்.