தமிழ் மற்றும் தெலுங்கு பல்வேறு வெற்றி திரைபடங்களை கொடுத்தும் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் திரிஷா. இவரின் சிறப்பான நடிப்பிற்கு தனியாக ரசிகர் கூட்டமே உள்ளது. இந்நிலையில் செய்தியாளர்கள் சந்திப்பில் திரிஷாவிடம் மகேஷ் பாபு குறித்து கருத்து கேட்டுள்ளனர். அதற்கு பதிலளித்த திரிஷா மகேஷ் பாபு எனக்கு நல்ல நண்பர் என்றும் அவருடன் தெலுங்கு படங்களில் பணியாற்றிய அனுபவம் எனக்கு உள்ளது என கூறினார்.

மேலும் மகேஷ் பாபுவுடன் பணியாற்றும் அனைவரிடமும் மிகவும் மரியாதையாகவும் தன்மையாகவும் பழகுவார் எனவும் அதிகாலையில் இருந்து இரவு வரை கடினமாக உழைத்து படப்பிடிப்பில் ஈடுபடுவார். அதனைப் பார்த்து எனக்கே குற்ற உணர்ச்சியாக இருக்கும் என அவர் தெரிவித்தார். மகேஷ்பாபு நடித்த ஒவ்வொரு காட்சியையும் உடனடியாக மானிட்டர் முன்பு அமர்ந்து கவனித்துக் கொள்வார் என குறிப்பிட்டுள்ளார்.