ஹாரி பாட்டர் புத்தகத்தின் முன்னணி வெளியீட்டாளர் அட்ரியன் வாகன். இவர் தனது குடும்ப உறுப்பினர்களுடன் இத்தாலிக்கு விடுமுறையை கொண்டாட சென்றுள்ளார். நெபுள்ஸுக்கு அருகே உள்ள சலேர்நோ மாகாணத்தின் கடற்கரையில் சிறிய படகு ஒன்றில் குடும்பத்தினருடன் ஆட்ரியன் பயணம் செய்து கொண்டிருந்த போது 85 பேருடன் வந்த சுற்றுலாக் கப்பல் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

இதில் அட்ரியன்  கடலில் விழுந்துள்ளார். அவரை மீட்டு  மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்ற நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். அட்ரியன்  கணவர் விபத்தில் காயம் அடைந்த நிலையில் இரண்டு குழந்தைகளும் காயம் இன்றி தப்பியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.