இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் செல்போன் டவர் கருவிகளை திருடும் கும்பல் செயல்பட்டு வருகிறது. இந்த கும்பலை கண்டறிய மாநில வாரியாக காவல்துறையினர்  தீவிர விசாரணையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் இன்று செல்போன் டவர் கருவிகளை திருடும் கும்பலைச் சேர்ந்த 5 நபரை உத்தரப்பிரதேச காவல்துறையினர் துரிதமாக செயல்பட்டு கைது செய்துள்ளனர்.

இந்த கும்பலிடம் நடத்திய விசாரணையில், டெல்லி, உத்திரபிரதேசம், ராஜஸ்தான், ஹரியானா, மராட்டியம், பஞ்சாப், மத்திய பிரதேசம், அசாம்  ஆகிய 8 மாநிலங்களில் செல்போன் டவர் கருவிகளை திருடி வந்துள்ளது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து இந்த திருட்டு கும்பல் இடமிருந்து செல்போன் டவர் கருவிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.