தமிழ்நாட்டில் முதலமைச்சர் தலைமையிலான அரசு அமைந்த பிறகு மகளிர் விடியல் பயணத்திட்டம் அறிவிக்கப்பட்டது. அதன்படி உள்ளூர்களில் இயக்கப்படும் அரசு பேருந்துகளில் பெண்கள் இலவசமாக பயணிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது.

இதன் மூலம் தினசரி இலட்சக்கணக்கான பெண்கள் பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்கின்றனர். இதன் மூலம் மாதந்தோறும் அவர்கள் ரூ. 888 சேமிப்பதாக அமைச்சர் தென்னரசு தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தமிழ்நாடு சட்டப்பேரவையின் இன்றைய கூட்டத்தில் திருவாடனை தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் கரு மாணிக்கம் மகளிருக்காண இலவச பயணம் போல ஆண்களுக்கும் கிடைக்குமா? என்று கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு பதில் அளித்த போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் பேருந்துகளில் ஆண்களுக்கு இலவச பயணம் குறித்த ஆர்வம் வரவேற்கத்தக்கது.

பெண்களின் வளர்ச்சி ஒதுக்கப்பட்ட நிலையில் இருப்பதால் அவர்களின் வளர்ச்சிக்காக இலவச பேருந்து பயணம் திட்டம் அறிவிக்கப்பட்டது. வரும் காலத்தில் தமிழக அரசின் நிதி நிலைமையை பொறுத்து ஆண்களுக்கு இலவச பயணம் வழங்கப்படுமா? என்பதை குறித்து பரிசீலனை செய்யப்படும் என்று அவர் தெரிவித்தார்.