
விவசாயிகளுக்கு இலவசம் மின்சாரம் வழங்கும் திட்டத்தில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி கடந்த ஏப்ரல் 8-ம் தேதி சூரிய சக்தியில் இயங்கும் பம்பு செட் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு இலவசம் மின்சாரம் வழங்க முடியாது என்று கூறியது.
அப்படிப்பட்ட விவசாயிகள் LT IIIA (1) என்ற பிரிவின் கீழ் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்றும், இந்த பிரிவில் முதல் 500 யூனிட்டுகளுக்கு ஒரு யூனிட் ரூ.4.80 என்றும், அதற்கு மேல் பயன்படுத்தினால் ஒரு யூனிட் 6.95 கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் கூறப்பட்டது.
மேலும் KW ஒன்றிருக்கு ரூ.150 கட்டணமாக வசூலிக்கப்படும் என்று தெரிவித்தது. ஆனால் இதற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்ததால் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் அந்த உத்தரவை திரும்ப பெற்றது.
கடந்த ஏப்ரல் 16ஆம் தேதி அன்று ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டது. அதில் ஏற்கனவே வெயிட்ட அறிவிப்பு திரும்பப் பெறப்பட்டுள்ளது. விவசாய பொறியியல் துறை மற்றும் பிற தொடர்புடைய அவர்களுடன் கலந்து ஆலோசித்து புதிய வழிகாட்டல்கள் வெளியிடப்படும் என்று கூறியிருந்தது.