
முன்னாள் கிரிக்கெட் வீரரும் நடிகருமான சலில் அன்கோலாவின் தாயார் புனேவில் உள்ள தனது வீட்டில் மர்மமான முறையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இது குறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணையை தொடங்கினர். இந்த நிலையில் சதில் அன்கோலா தனது தாயின் மரணம் குறித்து தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார். அதில், தனது தாயின் புகைப்படத்தை பகிர்ந்து, ஹார்ட் பிரேக் எமோஜியுடன் “குட் பை அம்மா” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த பதிவு பலரது கவனத்தை ஈர்த்து, பலரும் அன்கோலாவுக்கு தங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அன்கோலா மற்றும் அவரது குடும்பத்திற்கு பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தாயின் மரணம் தொடர்பான மேலும் விவரங்களை போலீசார் விரைவில் அறிவிக்க வாய்ப்புள்ள நிலையில், சமூக வலைதளங்களில் அவருக்கு ஆறுதல் தெரிவிக்கும் பதிவுகள் அதிகரித்துள்ளன.