தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்று முன்னாள் முதலமைச்சர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் டாக்டர் மு.கருணாநிதி என்ற பெயரில் நினைவு நாணயம் வெளியிடுவதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. ஆங்கிலம் மற்றும் இந்தியில் அவரின் பெயரோடு தமிழ் வெல்லும் என்ற வாசகம் இடம் பெற உள்ளது. இதற்கான உத்தரவு விரைவில் மத்திய அரசின் கெஜட்டில் வெளியாக இருக்கிறது . இதற்கான மாதிரி வடிவத்தை தமிழ்நாடு அரசு வழங்கியுள்ளது.