தமிழகத்தில் உள்ள மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவிக்காலம் ஜூலை 24-ம் தேதி முடிவடையும் நிலையில் மாநிலங்களவை உறுப்பினர்கள் தேர்தல் நடைபெற்றது. இதில் திமுக சார்பில் நான்கு பேரும் அதிமுக சார்பில் இரண்டு பேரும் போட்டியிட்ட நிலையில் ஆறு பேரும் போட்டி இன்றி தேர்வாகியுள்ளனர்.

அதன்படி திமுக சார்பில் சிவலிங்கம், சல்மா, வில்சன் மற்றும் கூட்டணி சார்பில் கமல்ஹாசன், அதிமுக சார்பில் இன்பதுரை மற்றும் தனபால் ஆகியோர் போட்டியிட்டனர். மேலும் இவர்கள் அனைவரும் போட்டி இன்றி தேர்வானதாக தேர்தல் நடத்தும் அதிகாரி அறிவித்ததோடு அவர்கள் வெற்றி பெற்றதற்கான சான்றிதழ்களையும் தற்போது வழங்கியுள்ளார்.