
மதுரை மாவட்டம் உத்தங்கடியில் திமுக கட்சியின் தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் தலைமையில் தற்போது திமுக பொதுக்குழு கூட்டம் தொடங்கியுள்ளது. இந்த பொதுக்குழு கூட்டத்திற்கு முதல்வர் ஸ்டாலின் வந்த நிலையில் முதலில் கலைஞர் கருணாநிதி, பேரறிஞர் அண்ணா, பெரியார் மற்றும் பேராசிரியர் அன்பழகன் ஆகியோரது திருவுருவப்படங்களுக்கு மரியாதை செலுத்தினார். அதன் பிறகு பகல்காம் தாக்குதலில் இறந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் திமுக பொதுக்குழு கூட்டத்தில் 27 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த நிலையில் மத்திய அரசுக்கு எதிராக பொதுக்குழு கூட்டத்தில் திருமணங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது. அவை, தமிழ்நாட்டிற்கு தரவேண்டிய நிதியை தர மறுக்கும் மத்திய அரசுக்கு கண்டனம். தமிழர்களின் மொழி உணர்வுடன் விளையாடாமல் இந்தி திணிப்பை கைவிட வேண்டும்.
கீழடி ஆய்வை மறுக்கும் தமிழ் விரோத மத்திய அரசுக்கு கண்டனம். ரயில்வே திட்டங்களில் தமிழ்நாட்டை புறக்கணிக்கும் மத்திய அரசுக்கு கண்டனம். சிறுபான்மையினர் உரிமைகளை பறிக்கும் நோக்கில் இஸ்லாமியர் சொத்துக்களை உரையாடும் வக்பு திருத்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும். மத்திய விசாரணை அமைப்புகளை தவறாக பயன்படுத்தும் மத்திய அரசுக்கு கண்டனம்.