
இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வருகிறது. பாகிஸ்தான் ட்ரோன் மூலம் இந்தியாவின் முக்கிய நகரங்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. அந்த தாக்குதலை இந்தியா வான் பாதுகாப்பு அமைப்புகள் முறியடித்து வருகிறது. மக்கள் வெளியே வர வேண்டாம். பாதுகாப்பாக வீட்டிலேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தர்மசாலாவில் நேற்று டெல்லி மற்றும் பஞ்சாப் அணிகள் இடையே நடைபெற்ற போட்டி பதற்றம் காரணமாக பாதியில் ரத்து செய்யப்பட்டது. தற்போது சிறப்பு வந்தே பாரத் ரயில் மூலம் டெல்லி மற்றும் பஞ்சாப் அணி வீரர்கள் டெல்லிக்கு வந்தடைந்தனர். போர் பதற்றம் காரணமாக ஐபிஎல் போட்டிகள் ஒரு வாரம் ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.