
சென்னையில் தற்போது மீனம்பாக்கம் பகுதியில் சர்வதேச ஏர்போர்ட் செயல்படும் நிலையில் இதைத் தொடர்ந்து இரண்டாவது பெரிய ஏர்போர்ட்டாக காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கு மத்திய அரசும் ஒப்புதல் கொடுத்த நிலையில் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர், ஏகனாபுரம் உள்ளிட்ட 13 கிராமங்களில் இருந்து நிலம் கையகப்படுத்தப்பட்ட இருக்கிறது. ஆனால் இங்கு நிலத்தை கையகப்படுத்துவதற்கு பொதுமக்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும் அந்த இடத்தில் பரந்தூர் விமான நிலையம் அமைவது உறுதியாகியுள்ளது.
இந்நிலையில் பரந்தூரில் விமான நிலையம் அமைக்க கையகப்படுத்தப்படும் நிலங்களுக்கு தற்போது விலையை அரசு நிர்ணயித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி ஒரு ஏக்கருக்கு 35 லட்சம் ரூபாய் முதல் அதிகபட்சமாக 2.57 கோடி வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதற்காக மொத்தம் 3331.25 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட இருக்கும் நிலையில் அதற்கான அரசாணையை தற்போது தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. மேலும் இந்த விலையின்படி கையகப்படுத்தப்பட்ட நிலத்தின் அளவைப் பொறுத்து பொதுமக்களுக்கு பணம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.