
சென்னை மாவட்டம் திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா கன்வென்ஷன் சென்டரில் ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஆந்திரா துணை முதலமைச்சர் பவன் கல்யாண் பங்கேற்றுள்ளார்.
இந்த நிலையில் நிகழ்ச்சியில் பங்கேற்ற பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் கூறியதாவது, ஒரே நாடு ஒரே தேர்தல் பிரதமர் மோடியின் கனவு. ஒரு தேர்தல் நடத்த ரூ.10,000 கோடி செலவு. மாநில தேர்தலுக்கு ரூ.1000 கோடி செலவு. தமிழகம் பெரியாரின் மண் அல்ல. பெரியாழ்வார் வாழும் மண். தமிழகம் அண்ணா மண் அல்ல… ஆண்டாளின் மண் என கூறியுள்ளார்.
பின்னர் ஆந்திரா துணை முதலமைச்சர் பவன் கல்யாண் கூறியதாவது, தமிழகம் சித்தர்களின் பூமி. நான் தமிழகத்தை விட்டு சென்றாலும் தமிழகம் என்னை விடவில்லை. தமிழகம் சித்தர்களின் பூமி, தமிழ் கடவுள் முருகனின் பூமி. ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து பொய்யான தகவல் பரப்பப்படுகிறது என கூறியுள்ளார்.