தக் லைஃப்’ திரைப்படம் இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில், கமல்ஹாசன் மற்றும் சிம்பு நடிப்பில் ஜூன் 5ம் தேதி வெளியாக உள்ளது. படக்குழு தற்போது சென்னை, டெல்லி, மும்பை, பெங்களூரு என நாடு முழுவதும் ப்ரோமோஷன் பணிகளில் ஈடுபட்டுள்ளது.

இந்த நிலையில், சமீபத்தில் நடைபெற்ற இசை வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன் கூறிய கருத்து புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது. கமல்ஹாசன், “தமிழிலிருந்து தான் கன்னடம் பிறந்தது” என தெரிவித்தார்.

நடிகர் கமலின் பேச்சால் தக் லைப் திரைப்படத்தை கர்நாடகாவில் வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. திரையரங்குகளுக்கு பாதுகாப்பு கோரி நீதிமன்றத்தை நாடி உள்ளனர். இந்த நிலையில் கர்நாடக உயர் நீதிமன்றம் மொழி குறித்து பேச நீங்கள் என்ன மொழி ஆய்வாளரா இல்லை வரலாற்று ஆய்வாளரா என கேள்வி எழுப்பியுள்ளது.

இந்த நிலையில் வருகிற 5-ஆம் தேதி தக் லைப் திரைப்படம் வெளியாகாது என கர்நாடகா உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மொழி விவகாரத்தில் கமல் மன்னிப்பு கேட்க மறுத்துள்ள நிலையில், பிரச்சனையை தீர்த்து விட்டு கர்நாடகாவில் தக் லைப் வெளியிடப்படும் எனவும், 5- ஆம் தேதி வெளியாகாது எனவும் உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

இது குறித்து பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் கூறியதாவது கன்னட மொழி விவகாரத்தில் கமல் பேசியது தேவையற்றது. நீண்ட கடிதம் எழுதுவதற்கு பதில் மன்னிப்பு கேட்பதில் என்ன தவறு என கேள்வி எழுப்பியுள்ளார்.