பிரபல இயக்குனரான அட்லி ராஜா ராணி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக திரையுலகில் தனது பயணத்தை ஆரம்பித்தார். அதன் பிறகு தெறி, மெர்சல், பிகில் உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களை இயக்கினார். ஷாருக்கான் வைத்து அட்லி இயக்கிய ஜவான் திரைப்படம் 1000 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.

தற்போது கோலிவுட் நடிகர் அல்லு அர்ஜுனனை வைத்து அட்லீ படம் இயக்க உள்ளார். 700 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. இந்த நிலையில் சத்யபாமா பல்கலைக்கழகம் இயக்குனர் அட்லீக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி கௌரவித்துள்ளது.

இந்த நிகழ்ச்சியில் பேசி அட்லீ வாழ்க்கையில் மிகவும் எமோஷனலான தருணம் இது என கூறினார். மேலும் சில காலமாகவே பொய் சொன்னால் இருமல் வருவதாக குறிப்பிட்டு, இந்த காலேஜில் தான் நன்றாக படிக்கும் பையன் எனக்கூறி கிண்டலாக சிரித்தார். டாக்டர் பட்டம் பெற்ற அட்லீக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.