
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள தானே மாவட்டத்தில் அம்ருத் நகரைச் சேர்ந்த 18 வயது இளைஞர் ஒருவர் தனது காதலியுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச் சம்பவம் குறித்து காவல்துறையினர் தரப்பில் கூறப்பட்டதாவது, கடந்த வெள்ளிக்கிழமை அன்று அந்த இளைஞர் தனது காதலியுடன் மொபைல் போனில் பேசிக் கொண்டிருந்தபோது இருவருக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதனால் மன வருத்தத்தில் இருந்த இளைஞர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார் என காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரது உடல் பிரேத பரிசோதனை முடிந்தபின் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும் இந்த மரணம் ஒரு உணர்வு ரீதியாக எடுக்கப்பட்ட தவறுதலான மரணம் என வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.