சல்மான் கான் இவர் பிரபல இந்திய திரைப்பட நடிகர் ஆவார். பாலிவுட்டின் முன்னணி நடிகர் சல்மான் கான் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சியின் தயாரிப்பாளரும் ஆவார். “பீவி ஹோ தோ ஐசி “என்ற திரைப்படத்தின் மூலம் முதல்முறையாக இந்தி திரையுலகில் தோன்றினார். இவருக்கு தற்போது லாரன்ஸ் பிஷ்னோய் மாபியா கும்பலிடம் இருந்து கொலை அச்சுறுத்தல்கள் வந்துள்ளன.இதனால் இவருக்கு ஒய் பிளஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டு வருகிறது.” Gun proof” காரில் தான் பயணம் செய்கிறார். இந்த நிலையில் நள்ளிரவு ஸ்டூடியோவில் இருந்து வீட்டிற்கு செல்லும் வழியில் இவரது காரை பின் தொடர்ந்து இளைஞர் ஒருவர் பைக்கில் சென்றுள்ளார்.

பாதுகாப்பு காவலாளிகள் அந்த இளைஞரை எச்சரித்தும் கவனிக்காமல் சல்மான் கானின் கார் பின்னாடியே சென்றுள்ளார். இந்நிலையில் சல்மான் கான் வீடு சென்றதும் அந்த இளைஞரை காவல்துறையினர் விரைந்து சென்று பிடித்துள்ளனர்.காவல் துறையினர் நடத்திய விசாரணையில் அவர் கல்லூரியில் படிக்கும் மாணவர் என தெரிய வந்தது . அதன் பிறகு பைக்கை வேகமாக ஓட்டியதன் காரணமாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, சல்மான் கானின் தந்தை சலீம் கான் உடற்பயிற்சி செய்வதற்காக காலையில் வெளியே சென்றுள்ளார்.

அவரை பின் தொடர்ந்து இருவர் பைக்கில் சென்றுள்ளனர்.மேலும் சலீம் கானை வழி மறித்து “பிஷ்னோவை அனுப்பி வைக்கட்டுமா?”என மிரட்டி உள்ளனர். அவர்களது பைக் நம்பரை வைத்து போலீசார் விசாரித்ததில் விளையாட்டாக செய்தோம் எனக் கூறியுள்ளனர். இதனால் பொது இடங்களில் கேளிக்கை செய்வது, தொந்தரவுக்கு உள்ளாக்குவது என்ற நோக்கில் வழக்கு பதிவு செய்து உள்ளனர். இச்சம்பவங்கள் ஒருவித அச்சுறுத்தலாக இருக்கக்கூடுமோ? என காவல்துறையினர் யூகிக்கின்றனர்.