
சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் லிக்சின் தியான்ஷெங் என்ற நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்தில் வேலைப்பார்க்கும் ஊழியர்கள் கழிவறையில் அதிக நேரம் செலவு செய்கின்றனர். இதனால் அவர்கள் கழிப்பறையில் அமர்ந்திருக்கும் புகைப்படம் சுவற்றில் ஒட்டப்பட்டுள்ளது இது தொடர்பான புகைப்படம் ஆன்லைனில் வைரலாகி வருகிறது.
இதைத்தொடர்ந்து பலர் இந்த நிறுவனத்திற்கு எதிராக தங்கள் கண்டனத்தை பதிவு செய்துள்ளனர். இதில் ஒரு பயனர் கண்காணிப்பு கேமராக்களை தவறாக பயன்படுத்தியதற்காக நிறுவனம் தண்டிக்கப்பட வேண்டும் என்றும், மற்றொருவர் ஊழியர்கள் நிறுவனம் மீது வழக்கு தொடர வேண்டும் என்றும் கூறினர். இதையடுத்து அந்த புகைப்படங்கள் அகற்றப்பட்டது.