18 ஆவது ஐபிஎல் தொடரில் 10 அணிகள் பங்கேற்று இருந்தது. இதன் இறுதி போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்றது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ், பெங்களூர் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதினர். இதில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் எடுத்து 190 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து 191 ரன்கள் எடுத்தால் சாம்பியன் பட்டத்தை வெல்லலாம் என்ற நிலையில் களம் இறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 184 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் பெங்களூர் அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை பெற்றது. பஞ்சாப் தரப்பில் அதிகபட்சமாக ஷஷாங் சிங் 61 ரன்கள் எடுத்தார். ஆர் சி பி சார்பில் அதிகபட்சமாக புவனேஸ்வர், குருனால் பாண்டியா தல இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதன் மூலம் ஆர்சிபி அணி வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் வெற்றி பெற்ற பின்னர் பெங்களூர் கேப்டன் ரஜத் படிதார் பேட்டி அளித்தார். இது குறித்து அவர் கூறியதாவது இது மிகவும் சிறப்பானது இது அணிக்காக நீண்ட காலம் விளையாடு வரும் விராத் கோலிக்கும் இந்த அணியை நீண்ட காலம் ஆதரித்து வரும் ரசிகர்களுக்கும் மிகவும் சிறப்பானது. இதற்கு இவர்கள் தகுதியானவர்கள் முதல் தகுதி சுற்றில் நாங்கள் வெற்றி பெற்ற பின்னர் கோப்பையை வெல்வோம் என்று நினைத்தேன். இந்த மைதானத்தில் 190 ரன்கள் நல்ல ரன்கள் தான்.

ஏனென்றால் ஆடுகளம் கொஞ்சம் மெதுவாக இருந்தது. எங்கள் பந்துவீச்சாளர்கள் திட்டங்களை செயல்படுத்தியது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. நான் அழுத்தம் ஏற்படும் போதெல்லாம் குருனால் பாண்டியாவை பந்து வீச அழைக்கிறேன். அதேபோல் சுயாஷ் ஷர்மாவும் தொடர்ந்து எங்களுக்கு சிறப்பாக இருந்தார். குறிப்பாக ரொமாரியோ ஷெப்பர்ட்  அவருடைய மூன்று ஓவரில் நல்ல திருப்புமுனைகளை கொடுத்தார்.

இது விராட் கோலியை கேப்டனாக வழி நடத்துவதற்கு கிடைத்த மிக அருமையான வாய்ப்பு எனக்கு இது மிகவும் கற்றுக் கொள்ளும் வாய்ப்பாக இருந்தது. முன்பே சொன்னது போல அவர் எல்லாவற்றுக்கும் தகுதியானவர், விராட் கோலி மற்றும் ரசிகர்கள் மேலும் அணி ஊழியர்கள் அணி நிர்வாகம் என அனைவரும் ஆதரித்த விதம் அழகாக இருந்தது. ரசிகர்களுக்கு ஒரு வரி சொல்கிறேன் ‘ஈ சாலா கப் நம்து’ என்று கூறினார்.