நாட்டில் உள்ள பல்வேறு மக்களுக்கு வீடு கட்டுவது என்பது கனவாகவே இருந்து வருகிறது. இந்நிலையில் ஏழை எளிய மக்களுக்கு தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களை வழங்கி வருகிறது. அந்த வகையில் சொந்த வீடு இல்லாதவர்களுக்கு ‘கலைஞரின் கனவு இல்லம் திட்டம்’ என்ற திட்டம் கொண்டுவரப்பட்டது. இதன் மூலம் வீடு இல்லாதவர்கள் பயனடைந்தனர். இந்த திட்டம் கடந்த 1975 ஆம் ஆண்டு முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியால் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் பின் தற்போது, இந்த திட்டத்தின் கீழ் 3500 கோடியில், ஒரு லட்சம் புதிய கான்கிரீட் வீடுகள் கட்டுவதற்கு ரூ.800கோடியும், ஊரக வீடுகள் சீரமைத்தல் திட்டத்திற்கு 600 கோடி முதலமைச்சர் ஒதுக்கீடு செய்துள்ளார்.

இதற்கான பணிகள் விரைவில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது 2024-25ம் நிதியாண்டில் இந்தத் திட்டத்தின் கீழ் ஒரு வீட்டிற்கு 3,50,000 வீதம் மொத்தம் 3500 கோடி நிதி ஒதுக்கீட்டிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இந்த வீடுகள் எல்லாம் விரைவாக கட்டப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் பயன்பெற விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 360 சதுர அடியில் நிலம் வைத்திருக்க வேண்டும். அதோடு விண்ணப்பதாரர்கள் குடிசை வீட்டில் தங்குபவராக இருக்க வேண்டும். கான்கிரீட்  மற்றும் மண் சுவர்க் மூலமாக வீடு கட்டி இருப்பவர்கள் இத்திட்டத்தின் கீழ் பயன்பெற முடியாது. விண்ணப்பதாரர்கள் சொந்தமான நிலம் வைத்திருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.