
இந்திய அரசு காவல்துறையினர் மற்றும் மத்திய அரசும் இணைந்து டிஜிட்டல் அரஸ்ட் எனக்கூறி பணத்தை மோசடி செய்யும் கும்பலிடம் இருந்து வரும் அழைப்புகளுக்கு ஏமாறாமல் விழிப்புடன் இருக்க தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இதன்படி காவல் துறையினரோ அல்லது UIADI அதிகாரிகள் எனக் கூறி தங்களது தனிப்பட்ட விபரம், otp அல்லது உங்களது சாதனத்திற்கான தொலைதூர அணுகல் போன்றவற்றை கேட்டால் கவனத்தில் கொள்ள வேண்டும். இது மாதிரியான அழைப்புகள் வந்தால் உடனடியாக இணைப்பை துண்டித்து விட்டு 1947 என்ற எண்ணிற்கு புகார் அளிக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
இதேபோன்று சமீபத்தில் ஆதார் அட்டை சட்ட விரோத நடவடிக்கை எனக்கூறி 86 வயது பாட்டியிடம் போன் மூலம் ஒருவர் நம்ப வைத்து பணம் மோசடி செய்துள்ள விவகாரம் வெளியாகியுள்ளது. இதுகுறித்து காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டதாவது, கடந்த டிசம்பர் 24 2024 முதல் மார்ச் 3, 2025 ஆம் ஆண்டு வரை பாதிக்கப்பட்ட மூதாட்டி இடம் ரூபாய் 20.25 கோடிக்கு பணம் மோசடி செய்துள்ளனர். தான் ஒரு போலீஸ் அதிகாரி என்று கூறி ஒருவரிடம் இருந்து வந்த அழைப்பு மூலம் இந்த மோசடி தொடங்கியுள்ளது. ஒரு புதிய வங்கிக் கணக்கை திறக்க அந்த மூதாட்டி ஆதார் அட்டை மற்றும் பிற தனிப்பட்ட தகவல்கள் பயன்படுத்தப்பட்டதாகவும் இது பண மோசடி உட்பட பல சட்டவிரோத நடவடிக்கைகளும் தொடர்புடைய பணம் பரிமாற்றம் தொடங்க பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறி உள்ளனர்.
மேலும் இது ஒரு சட்ட படி குற்றம் இந்த வழக்கில் அந்த மூதாட்டியின் பெயரும் மற்றும் அவரது மகள் உட்பட அவரது குடும்ப உறுப்பினர்கள் இருவர் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் எனக் கூறி மிரட்டி உள்ளனர். இந்த சோதனை முழுவதும் முடியும் வரை குற்றம் சாட்டப்பட்டவர்கள் “டிஜிட்டல் அரெஸ்ட்” நிலையில் இருக்கும்படியும் அறிவுறுத்தியுள்ளனர். மேலும் இந்த வழக்கில் இருந்து அவரது பெயரை அவரது குடும்பத்தினர் பெயரை நீக்குவதற்கு வங்கி கணக்குகளுக்கு பணத்தை மாற்றும் படியும் அந்த மூதாட்டியை வற்புறுத்தி உள்ளனர்.
அதன்படி அந்த மூதாட்டி பல்வேறு வங்கி கணக்குகளுக்கு ரூபாய் 20 கோடி வரை பணப்பரிமாற்றம் செய்துள்ளார். இந்த நிலையில் தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த அவர் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார். அவர்கள் உடனடியாக விசாரணையை தொடங்கி பணப்பரிமாற்றங்களை கண்காணித்து மோசடி செய்த கும்பலை கைது செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த கும்பல் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது.