உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள ஆக்ராவில் உள்ள ஒரு கல்லூரியில் நஷீம் என்ற பெண் பேராசிரியர் பணியாற்றி வருகிறார். இவரின் பெயரில் வாட்ஸ் அப்பில் போலியாக கணக்கு தொடங்கப்பட்டு மாணவிகளின் செல்போன் நம்பர்கள் ஹேக் செய்யப்பட்டுள்ளது. அதாவது பெண் பேராசிரியர் பெயரில் மாணவிகளுக்கு முதலில் வாட்ஸ் அப்பில் மர்மநபர் ஒருவர் மெசேஜ் அனுப்பியுள்ளார். பெண் பேராசிரியர் என்பதால் மாணவிகளும் தங்கள் பற்றிய அனைத்து விவரங்களையும் அவரிடம் கூற கடைசியில் மாணவர்களிடம் ஒடிபி நம்பரை பெற்று மர்ம நபர் அவர்களின் செல்போனை ஹேக் செய்துள்ளார்.

அதன் பிறகு மாணவிகளுக்கு தொடர்ந்து ஆபாச படங்களை அனுப்பி அவர்களின் நிர்வாண போட்டோக்களை அனுப்புமாறு மிரட்டியுள்ளார். இதனால் அதிர்ச்சடைந்த மாணவிகள் சம்பந்தப்பட்ட பேராசிரியரிடம் சென்று கேட்டுள்ளனர். இதைக் கேட்ட பேராசிரியர் நஷீம் உடனடியாக ‌ காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரின் படி வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள் ‌