
சமூக ஊடகங்களில் தற்போது வைரலாகும் இரண்டு வீடியோக்கள் அனைவரையும் வியக்க வைத்துள்ளன. இந்த வீடியோக்களில், திருடர்கள் சாதாரணமாக இல்லாமல் வித்தியாசமான முறையில் திருடும் காட்சிகள் பதிவாகியுள்ளன.
they were so confused 😭 pic.twitter.com/xPRRjEPDBy
— vy (@shydvaa) June 6, 2025
முதல் வீடியோவில், ரயிலில் ஜன்னல் அருகே அமர்ந்திருந்த ஒரு பயணியின் தலையில் இருந்த பீனியை, வெளியே நின்ற ஒரு திருடன், ஜன்னலில் இருந்த சிறிய ஓட்டையின் வழியாக கையை நுழைத்து வெறும் ஒரு நொடியில் பறித்துச் சென்றார். ஆனால் பயணியால் ஒன்னும் செய்ய முடியவில்லை.
Smart thief…
— Tansu Yegen (@TansuYegen) June 6, 2025
இதேபோல மற்றொரு வீடியோவில், குடையை சுமந்தபடி நடந்து செல்வதுபோல் காணப்பட்ட மற்றொரு திருடன், அருகில் நின்ற ஒருவர் தன் முதுகில் வைத்திருந்த பையை தனது குடையின் நுனியில் எடுத்துக்கொண்டார். உடனே குடையைத் திறந்ததால், அந்த பை முழுவதுமாக குடையின் மேல் மறைந்துவிட்டது.
பாதிக்கப்பட்ட நபர் குழப்பமாக தன் பையைத் தேடி திரும்பிப் பார்த்தபோது, பேக் ஏற்கனவே திருடப்பட்டுவிட்டது. இந்த வீடியோ பார்ப்பவர்களுக்கு ஒரு புன்னகையையும், அதே சமயம் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இவை இரண்டும் இணையத்தில் பெரும் அளவில் பகிரப்பட்டு வருகின்றன. நெட்டிசன்கள், “இதுவும் ஒரு கலையே!” எனக் குறிப்பிட்டுள்ளார்கள். ஆனால் மற்றொரு பக்கம், இவை மக்கள் இடையே பாதுகாப்பு குறித்த கவலைக்குரிய சிந்தனையையும் உருவாக்கி இருக்கின்றன.
“ஒரே நொடியில் நம்முடைய சொத்துக்கள் போய்விடலாம்… கவனமா இருக்கணும்!” என்ற எச்சரிக்கையை இந்த வீடியோக்கள் பலருக்கும் எடுத்துச் சொல்லுகின்றன.