தமிழகத்தில் கடும் மழை காரணமாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். சென்னையில் நான்கு மாவட்டங்களில் (சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு) உள்ள ஐ.டி. நிறுவன ஊழியர்களை அக்டோபர் 15 முதல் 18 வரை வீட்டிலிருந்து வேலை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும, மெட்ரோ ரயில் சேவைகள் மற்றும் பறக்கும் ரயில்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் பொதுமக்களுக்கு மாற்று வழித்தடங்களை ஏற்படுத்தவும் உத்தரவிட்டுள்ளார்.

மழையால் பாதிக்கப்படும் பகுதிகளில் நிவாரண நடவடிக்கைகளை முன்னேற்ற வேண்டும் என்றும், மீட்புப் படகுகளை முன்கூட்டியே பாதிக்கப்படும் பகுதிகளில் நிறுத்த வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார். ஆதரவற்றோர் இல்லங்களில் போதுமான உணவுப் பொருட்களை சேமிக்கவும், நிவாரண முகாம்களில் தங்குமிட வசதிகளை தயாராக வைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.