சென்னை மெட்ரோ ரயில் பணிகள் காரணமாக, அடையாறு மற்றும் தேனாம்பேட்டை பகுதிகளில் குழாய்கள் மூலம் வழங்கப்படும் குடிநீர் விநியோகம் 3 நாட்களுக்கு நிறுத்தப்பட உள்ளது.

செப்டம்பர் 24ஆம் தேதி காலை 9 மணி முதல் செப்டம்பர் 26ஆம் தேதி அதிகாலை 4 மணி வரை, மந்தைவெளி ராமகிருஷ்ண மடம் சாலையில் குடிநீர் குழாய் இணைக்கும் பணி நடைபெற உள்ளதால், இந்த பகுதிகளில் குடிநீர் விநியோகம் பாதிக்கப்படும். இதனால், தேனாம்பேட்டை மற்றும் அடையாறு பகுதிகளில் வசிக்கும் மக்கள், இந்த 3 நாட்களுக்கு தேவையான அளவு குடிநீரை முன்கூட்டியே சேமித்து வைக்க வேண்டும் என குடிநீர் வாரியம் கேட்டுக்கொண்டுள்ளது.

இந்த குடிநீர் விநியோகம் நிறுத்தம் காரணமாக பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாக நேரிடலாம் என்பதை உணர்ந்து, குடிநீர் வாரியம் மாற்று ஏற்பாடுகளை செய்து வருகிறது. அவசரத் தேவைக்கு குடிநீர் லாரிகள் மூலம் வழங்கப்படும். மேலும், இந்த குறித்து கூடுதல் விவரங்களுக்கு குடிநீர் வாரியத்தின் தொடர்பு எண்ணை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது