திருப்பூரைச் சந்தோஷ் என்பவர் வசித்து வருகிறார். இவர் ஜாதி, மதம் இல்லை சான்றிதழ் வேண்டும் என்று கடந்த 2023 ஆம் ஆண்டு தாசில்தார் மற்றும் கலெக்டருக்கு விண்ணப்பம் அளித்திருந்தார். ஆனால் அவருக்கு ஜாதி, மதம் இல்லை சான்றிதழ் வழங்கப்படவில்லை. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் அவர் வழக்கு தொடர்ந்தார்.

இது தொடர்பான வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. இந்நிலையில் ஜாதி, மதம் இல்லை என சான்றிதழ்கள் வழங்கும் வகையில் உரிய அரசாணை பிறப்பிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது. மேலும் அரசியல் சாசனம், சாதிய பாகுபாடுகளை தடை செய்த போதிலும் சமூக வாழ்க்கையில் இன்னுமும் முக்கியத்துவம் பெற்றுள்ளது என்று நீதிபதிகள் வேதனை தெரிவித்தனர்.

இதை தொடர்ந்து ஜாதி, மதம் இல்லை என சான்றிதழ் வழங்க கோரி வழக்கு தொடர்ந்த மனுதாரருக்கு சென்னை உயர்நீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது.