உலகம் முழுவதும் செல்போன் உபயோகம் அதிகரித்து வரும் நிலையில் செல்போனிலிருந்து வெளியாகும் கதிர் வீச்சால் மனிதர்களுக்கு பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படும் என்று கூறப்படுகிறது. மூளை புற்று நோயை உண்டாக்கும் என்ற அச்சமும் பரவுகிறது. இது குறித்து உலக சுகாதார அமைப்பு மற்றும் இதர சர்வதேச சுகாதார அமைப்புகள், செல்போன் பயன்பாட்டுக்கும், பல்வேறு உடல் உபாதைகளுக்கும் சம்பந்தம் இருப்பதற்கான உறுதியான ஆதாரம் இல்லை என்று கூறியுள்ளன.

இருப்பினும் இதுகுறித்து விரிவான ஆய்வு நடத்துவது முக்கியம் என தெரிவித்துள்ளன. இந்நிலையில் உலக சுகாதார அமைப்பு, செல்போன் பயன்பாட்டுக்கு மூளை புற்றுநோய்க்கும் சம்பந்தம் உள்ளதா என்று அறிய ஆய்வு மேற்கொண்டது.

பத்து நாடுகளை சேர்ந்த 11 ஆய்வாளர்கள் இதில் பங்கேற்றனர். மேலும் ஆஸ்திரேலியா அரசின் கதிரியக்க பாதுகாப்பு குழுவும் பங்கேற்றது. கடந்த 1994 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை நடத்தப்பட்ட 63 ஆய்வுகளின் முடிவு காலம் இந்த ஆய்வில் பயன்படுத்த பட்டன. செல்போனில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சு, அதன் பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

அந்த ஆய்வில் செல்போன் பயன்படுத்துவதற்கு மூளைப்போற்று நோய் வருவதற்கான அபாயம் அதிகரிப்பதற்கும் சம்பந்தமில்லை என்றும், நீண்ட நேரம் செல்போன் பேசுபவர்களுக்கும் 10 ஆண்டுகளுக்கு மேலாக செல்போன் உபயோகிப்பவருக்கும் இது பொருந்தும் என கூறுகிறது. செல்போனை உபயோகிப்பது அதிகரித்துள்ளது போல் மூளை புற்றுநோய் பாதிப்பு அதிகரிக்கவில்லை. இதிலிருந்து இரண்டுக்கும் சம்பந்தம் இல்லை என்று அறியலாம் என்று அந்த ஆய்வில் கூறப்படுகிறது.