தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் ராணா டகுபதி. இவர் பாகுபலி திரைப்படத்தில் வில்லனாக நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானார். நடிகர் ராணா தமிழில் என்னை நோக்கி பாயும் தோட்டா, பெங்களூரு நாட்கள், ஆரம்பம் மற்றும் இஞ்சி இடுப்பழகி போன்ற படங்களில் நடித்துள்ளார். நடிகர் ராணா தற்போது நடிகர் வெங்கடேஸுடன் சேர்ந்து ராணா நாயுடு என்ற வெப் தொடரில் நடித்துள்ளார். இந்த வெப் தொடரில் அளவுக்கு மீறிய ஆபாச காட்சிகள் மற்றும் அருவருக்கத்தக்க காட்சிகள் இருப்பதாக ரசிகர்கள் பலரும் தங்களுடைய கண்டனங்களை பதிவிட்டு வருகிறார்கள்.

அதோடு குடும்பத்தோடு சேர்ந்து படத்தை பார்க்க முடியவில்லை எனவும் ரசிகர்கள் ராணாவை திட்டி தீர்த்து வருகின்றனர். புகழ்பெற்ற குடும்பத்தை சேர்ந்த நீங்கள் இப்படி ஆபாச தொடரில் நடிக்கலாமா என பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள். இந்நிலையில் நடிகர் ராணா ஆபாச தொடரில் நடித்ததற்காக ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். மேலும் குடும்பத்தோடு சேர்ந்து யாரும் படத்தை பார்க்க வேண்டாம். தனித்தனியாக சேர்ந்து பாருங்கள் என்றும் பதிவிட்டுள்ளார் ‌