
சீனாவில் ரென் ஜுன்ஜி என்ற சிறுவன் வசித்து வந்துள்ளார். இவருக்கு புற்றுநோய் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகஅவர் படித்த பள்ளியில் நடைபெற்ற பள்ளி பட்டமளிப்பு விழாவில் அவரால் கலந்து கொள்ள முடியவில்லை. இதுகுறித்து தகவலறிந்த சக மாணவர்கள் 2 கிலோமீட்டர் நடந்தே சென்று அவரை சந்திக்க முயன்றனர். 50 மாணவர்கள் ஒன்று சேர்ந்து சிறுவனை சந்திக்க சென்றுள்ளனர்.
அப்போதான் அவருடன் பேசி குழு புகைப்படம் எடுத்து மகிழ்ந்து நேரத்தை செலவிட்டுள்ளனர். ஆனால் மறுநாளே அந்த சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார். இது சக மாணவர்கள் மத்தியில் பெரு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சிறுவன் ரென் கடந்த மாதம் 16ஆம் தேதி தனது பிறந்தநாளை கொண்டாடியிருந்த நிலையில் தற்போது அவர் உயிரிழந்தார்.