கிரீஸ் நாட்டின் மத்திய பகுதியில் துறைமுக நகரமான வோலோஸ் அமைந்துள்ளது. இங்குள்ள கடற்கரை மற்றும் நீர்நிலைகளிலிருந்து மீன்கள் கொத்து கொத்தாக செத்து மிதக்கிறது. இது அந்த நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் அவசரநிலை பிறப்பிக்கப்பட்டது. சுமார் ஒரு மாத காலமாக அங்கு அவசரநிலை பிறப்பிக்கப்பட்ட நிலையிலும் நிலைமை கட்டுப்பாட்டை மீறி செல்கிறது.

சுமார் நூறு டன்களுக்கும் அதிகமான மீன்கள் செத்து மிதக்கிறது. இந்த சம்பவம் காலநிலை மாற்றத்தால் ஏற்படுவதாக அதிகாரிகள் கூறுகிறார்கள். இருப்பினும் அதிகப்படியான மீன்கள் செத்து மிதப்பதால் அது அழுகும் பட்சத்தில் பொதுமக்களுக்கு சுகாதாரக் குறைவு மற்றும் நோய்கள் ஏற்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இந்த இறந்த மீன்களை அகற்றும் பணியில் உள்ளூர் நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. மேலும் இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.